புதன், 28 நவம்பர், 2018

தென்னை மறு நடவு எனும் சூது :- குமார் அம்பாயிரம்

பழைய டெல்டா கரைதனில் புகழ்ச் சோழன் காலத்தில் சுந்தரர் விகிர்தேஸ்வர் மேல் பாடியுள்ள பதிகத்தில், வெப்பத்தினால் உதிர்ந்த மூங்கிலின் முத்துக்களும், ஏலம்,இலவங்கம்,தக்கோலம்( வால் மிளகு),இஞ்சி ஆகியவை அடர்ந்து வளர்ந்த சிற்றாறின் கரை மேல், தாழை,மா,புன்னை,ஞாழல்,குருகத்தி, ஆகிய மரங்களின் மேல் குயில்கள் கூவும் கூவலைக் கேட்டு அஞ்சுகின்ற தன்மையுடையது மான்கள் என எழுதிச்செல்கிறார் சதகத்தில். இது பத்தாம் நூற்றாண்டு பாடல்.

இங்கே, தென்னை டெல்டாவிலோ தமிழக நிலப்பரப்பின் வேறெந்த நிலவியலிலோ இந்த நிலத்திற்கான மரமாக இருந்ததில்லை.  இருந்ததற்கான ஆதரமும் இல்லை. மேலும், அவை பிற்காலத்தில் நவீன காலத்தில்
தன் அடிப்படை உரிமைகளைக்
கேட்க வைப்பதை மறக்கடிக்கும்
பணப்பயிராகத் தென்னை இங்கே
தோட்டக் கலைத் துறையினரால்
பரிந்துரைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது.

முப்போகமும் நாற்போகமும் நெல் விதைத்த விவசாயி
காவியிரில் கால்வாயில் தண்ணீர் கேட்பார்; கடைமடை வரை அது வரவேண்டுமென்பார். கொடி பிடிப்பார்; கோசம் இடுவார். இது பகுதி விவசாயிகளின் கதை.

தென்னையை வளர்த்தா இளநீரு; பிள்ளையை வளர்த்தா கண்ணீரு.
தென்னையை வச்சவன் சாப்பிட்டுச் செத்தான், பனையை வச்சவன் பாத்துச் செத்தான். இவையெல்லாம் பழமொழிகளா? பழமொழிகளின் தோற்றத்திலான விளம்பரங்கள்.

சுய தண்ணீர்க் கால்வாய் உரிமைகளைக் கேட்காத ஒரு நிலத்தொகுதியை, மக்களின் நினைவுகளை நிலத்தில் இருந்து பணப்பயிர்; மரப்பயிர் எனும் மோகம் காட்டி அழித்தொழிப்பதே தென்னை நடவின் திட்டம்.

முன்னே சொன்னார்கள். ஓலையில கீத்து பின்னலாம்; ஓலைக் குச்சியில தொடப்பம் கட்லாம்னு. மென் தொடப்பம் வந்திட்டு;ஓலைக்குப்பதில் கூலிங் ஷீட் வந்திட்டு.

பதக் குட்டையில் அழுகுகிறது
ஓலைகள். நம் நிலப்பரப்பிற்கு டெல்டா பகுதிகளுக்கு ஒவ்வாதான
மரப்பயிர்களைப் பரிந்துரைத்து,
இன்று இப்படி ஒரு இடர் வரும்போது அதை எதிர்கொள்ளும் திறன் பற்றிய அறிவின்றி, முறிந்த தென்னைகளுக்குப் பதில்  மீண்டும்
தென்னையே வழங்குவோம் என்பது, இருண்ட வாழ்வில் இன்னும் இருள் சூதுதானே கவ்வும்.

தோழர் குமார் அம்பாயிரம் அவர்களது பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக