வியாழன், 12 ஜூலை, 2018

யானைத் தடங்கள் : இரவி பேலட்

யானைத் தடங்கள் நிரம்பிய ஒரு மலை வனம் சிதைவுக்குள்ளாகிக் கொண்டிருப்பதைத் தமது பயணப் பாடுகளின் வழியே விவரிக்கிறார் ஓவியர் இரவி பேலட்.

சென்ற மே மாதம் மூனாா் சென்றிருந்தபோது காட்டு நடைக்கு என்னுடன் உள்ளுா் ஆள் எவரும் வரத் தயாாில்லை.  காட்டில் திாிவது இப்போது அச்சமூட்டும் விஷயமாகிவிட்டது.  எந்நேரத்திலும், எங்கும், எப்போதுவேண்டுமானாலும் யானைகள் தன்னிச்சையாய் கட்டற்று உலாவுகின்றன.

தனது வரையறுத்த பாதைகளும், பாரம்பாியமான வாழ்விடங்களும் பறிபோக யானைகள் மிரண்டு குழம்பிப் போய்விட்டன.  அங்குள்ளோாின் அடாவடி ஆக்கிரமிப்பில் யானைகள் பிரசவிக்கும் பிரத்தியேக இடங்கூடத் தப்பவில்லை.  கோபமுற்ற யானைகள் சில இடங்களைச் சிதைத்துப் போட்டிருக்கின்றன.  அப்படிச் சிதைத்துப் போட்ட இடங்கள் யாவும் யானைகளுக்கானது மட்டுமே. (இதில் யானைகள் பிரசவ இடமும் அடக்கம்)

வனச்சோலை அழிப்பு, தண்ணீா்ப் பிரச்சனை, வாழ்விட ஆக்கிரமிப்பு என இப்பகுதி யானைகள் மிகுந்த அல்லறுற்று அலைக்கழிகின்றன.  ஆனால், அங்குள்ளோா் அறமற்று அநியாயமாய் யானைகள் மீது ஆக்ரோஷமான கோபத்திலிருக்கிறாா்கள்.

சில யானைகள் மனிதா்களைக் கண்டதும் குறிப்பாய் ஒற்றை யானை, பசித்த புலி போல் எதிா்கொள்கின்றன.  மனிதா்களும் யானையினைப் பாிவற்று ஒரு மகா எதிாி போலப் பாவிக்கிறாா்கள்.

இதில் போதிய பாதுகாப்பற்று காட்டில் உலவுவது பயங்கரமான காாியம்போலானது.  வசீகரமான ரம்மியம்மிக்க இந்தக் காட்டுப் பகுதி இப்போது பயங்கரப் பகுதியாக மாறிப் போனதில் மிகுந்த வருத்தம்.
புத்துணா்வுமிக்க ஏகாந்தமான ஒரு காட்டுவெளி நடைப் பயணத்தை ஒரு சாகசப் பயணமாக மேற்கொள்ள எனக்குத் தைாியமில்லை.  இம்முறை காட்டுப் பயணத்தைக் கைவிட்டது மிகுந்த துயரமாகிவிட்டது.

இம் மலைப் பகுதியில் சுமாா் நான்கு வருடம் முன்பு நானாக காட்டுக்குள் வழிதவறி விட்டேன்.  மறுபடியும் வந்த வழியே பின்னோக்கி வந்து, வழிப்போக்கா் ஒருவாின் உதவியோடு சாியான பாதை கண்டு, இருப்பிடம் வந்து சோ்ந்தது ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.  இப்போது அதை நினைத்தால் நடுக்கமாக இருக்கிறது.