திங்கள், 13 செப்டம்பர், 2021

புத்தகம் - கவிதை : அ.ம.அகரன் தமிழீழன்


உன் நிழல் பயணத்தில்
முள் பாதையும் 
மலர்ப் பாதையாகும்.

உன்னோடு பயணம் செய்தால்
நாடி நரம்புகள் துள்ளும்.

உன் எழுத்துயிர் பிடித்தால்
மேதைகள் ஆக்கும்.
மனிதர்களை மேதைகளாக்கி இப்பூவுலகையும் மயக்கும்.

உன் உயிர் ஞானத்தால்
இந்த ஞாலமும் 
பூச்சூடிக் கொள்கிறது.

உன்னைச் சுவாசிக்காதவர்கள்
உலகில் நிலைத்ததில்லை.

காகிதப்பூ மணக்காதென்பர்.
நீயும் காகிதம்தான்
மனதுக்குள் எப்போதும்
மணத்திருக்கிறாய்.

உன்னை வாசித்துச் 
சுவாசிப்போரது மனம்
வானமாய் விரிகிறது.

அ.ம.அகரன் தமிழீழன்.