வெள்ளி, 9 டிசம்பர், 2022

வடஇந்தியத் தொழிலாளர்களை வெளியேறச் சொல்வது நியாயமா? - காளிங்கன்


பிழைப்பதற்காக வந்திறங்கும் வட இந்திய ஏழைத் தொழிலாளர்கள் வெளியேறச் சொல்வது நியாயமாகுமா? பாவம் இல்லையா அவர்கள்?

தமிழகம் போன்ற அந்நிய மண்ணுக்குச் செல்லாமல் தங்களது சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற்று கண்ணியம்மிக்க - கெளரவமான வாழ்வை உறுதிப்படுத்த மத்திய - மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும் என்ற எந்தக் கோரிக்கையும் போராட்டமும் வட இந்திய மாநிலங்களில் நடப்பதாகத் தெரியவில்லை. 

தொழிலாளர்கள் நலன் பற்றி ஓயாமல் பேசும் வட இந்திய - தமிழக இடதுசாரிகள் கூட அந்தந்த மாநில அரசுகள் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டும் எனக்கோரிக்கை வைப்பதற்குப் பதிலாக தாய் மண்ணை விட்டு வெளியேறி தமிழகத்தில் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதை ஆதரித்து பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறார்கள். 

வட இந்தியத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளைப் பேசினால் குழந்தை குட்டிகளுடனும் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்தபடி கண்களில் ஏக்கம் நிறைந்த முகங்களுடன் நிற்கும் அவர்களை நம் முன்னே நிறுத்தி நாம் ஏதும் சொல்ல முடியாதபடி இரக்கத்தை வரவழைத்து விடுகிறார்கள்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் திரைகடலோடியும் திரவியம் தேடு என்றும் உலகுக்குச் சொன்ன தமிழகம் இதை எப்படி எதிர்கொள்வது?

எங்கு சென்றும் உழைத்து உயிரை உடம்பில் தேக்கி வைப்பதற்கு உள்ள உரிமையை யாரும் மறுத்துவிட முடியாது.

வட இந்தியத் தொழிலாளர்கள் வரட்டும். ஆனால் அரசமைப்பு சிறப்புச் சட்டம் 371 - ஐப் பெற்றுள்ள வட இந்திய, வட கிழக்கிந்திய மாநிலங்களில் அமலில் உள்ளதைப் போன்ற 'உள்ளக அனுமதி முறையினைப்' (Inner Line permit) பெற்று வரட்டும். ஒப்பந்தப் பணிக்காலம் முடிந்ததும் தம் மாநிலங்களுக்குத் திரும்பட்டும்.  

இந்திய அளவில் தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர பிற அனைத்து மாநிலங்களும் கல்வி - வேலைவாய்ப்பில் மண்ணின் மக்களுக்கே (80%-90% வரை) முன்னுரிமை எனச் சட்டம் இயற்றியுள்ளன. பல மாநிலங்கள் 371 சிறப்புச் சட்டமும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதையே நாமும் கோருவதே நியாயம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக