வெள்ளி, 9 டிசம்பர், 2022

தமிழகத்தில் வடவர் குடியேற்றமும் உள்நுழைவு அனுமதிச் சீட்டின் தேவையும்


வட இந்தியத் தொழிலாளர்களால் தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகி வருவதாக நீண்ட காலமாகவே ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில்தான் இது உச்சத்தை எட்டியுள்ளது. மிகப் பெரிய சட்டம் ஒழுங்கு, வாழ்வாதார பிரச்சினையாக இது எதிர்காலத்தில் மாறக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்தும் வருகின்றன. இந்த நிலையில்தான் உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறையை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென் இந்தியா முழுவதிலும் வட இந்திய மற்றும் வட கிழக்கு இந்தியத் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். பெரும்பாலும் கூலி வேலைதான் பார்க்கின்றனர். இதில் வட கிழக்கு இந்தியர்கள் ஹோட்டல் துறையில் அதிகம் உள்ளனர். அதேசமயம், வட இந்தியத் தொழிலாளர்கள் கட்டுமானத் துறையிலும், பிற தனியார் தொழில் நிறுவனங்களிலும் அதிக அளவில் உள்ளனர்.

வட கிழக்கு இந்தியத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பிரச்சினை இல்லாதவர்கள். இவர்களால் பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் வட இந்தியத் தொழிலாளர்களால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக மக்களிடையே குமுறல் வெடித்து வருகிறது. பல இடங்களில் திருட்டுக்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். கொலை, கொள்ளைப் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். பலர் இதுதொடர்பாக கைதாகியும் உள்ளனர். சென்னை வேளச்சேரியில் கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தின்போது வட இந்தியக் கொள்ளையர்களை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற சம்பவத்தையும் தமிழ்நாடு பார்த்தது.

இந்த நிலையில் பல ஊர்களில் இந்த வட இந்தியத் தொழிலாளர்களால் பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இப்படித்தான் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் எஸ் கே எம் எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் இரவு லாரி மோதி வடமாநில தொழிலாளி ஒருவர் பலியானார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொடக்குறிச்சி போலீஸார் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தைக் கைவிட மறுத்த வட இந்திய தொழிலாளர்கள் திடீரென போலீஸார் மீது தாக்குதலில் குதித்தனர். பெருமளவில் வன்முறையில் குதித்தனர். போலீஸாரை கட்டையால் அடித்தும், கற்களை வீசித் தாக்கியும், கண்ணாடிகளை உடைத்து குத்தியும் வெறித்தனமாக நடக்க ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து அதிரடிப்படை போலீஸார் வரவழைக்கப்பட்டு வட இந்தியத் தொழிலாளர்கள் மீது சரமாரியான தடியடி நடந்தது. அதில் 40க்கும் மேற்பட்டோரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். கால்நடையாகவே தங்களது மாநிலங்களுக்கு நடந்து சென்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாநில மக்களும் தாயுள்ளத்தோடு உணவு உள்ளிட்டவற்றைக் கொடுத்து உதவி செய்து பரிவுடன் கவனித்தனர். ஆனால் அப்படிப்பட்ட மாநிலமக்கள் மீதே தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்த வட மாநிலத் தொழிலாளர்கள் சென்றிருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியத் தொழிலாளர்களால் பெரும் பிரச்சினை ஏற்படும் என்று ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வந்த நிலையில் அதேபோல நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த நிலையில்தான் வட இந்தியத் தொழிலாளர்களால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில், உள் நுழைவு அனுமதிச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது என்ன உள் நுழைவு அனுமதிச் சீட்டு?

Inner liner permit என்பதைத்தான் தமிழில் உள் நுழைவு அனுமதிச் சீட்டு என்று சொல்கிறார்கள். அதாவது வெளி மாநிலத்தைச் சேர்ந்த நமது மாநிலத்திற்குள் வரும்போது அவர்கள் இந்த அனுமதிச் சீட்டை வாங்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அவர்கள் தமிழ்நாட்டுக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்தக் காலம் முடிவடைந்ததும் சொந்த மாநிலத்திற்கு திரும்பிப் போய் விட வேண்டும்.

இந்த அனுமதிச் சீட்டு முறை தற்போது வட கிழக்கு மாநிலங்களான மிஸோரம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் லட்சத்தீவில் மட்டும் அமலில் உள்ளது. இங்கு இந்த முறை கொண்டு வரப்படக் காரணம், பாதுகாக்கப்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் அந்தப் பகுதியின் தனித் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கில்தான். இந்த அனுமதிச் சீட்டானது 15 நாட்களுக்கு மட்டுமே செல்லும். 15 நாட்களுக்குப் பிறகு அவர்கள் ஒன்று அனுமதிச் சீட்டை புதுப்பிக்க வேண்டும் அல்லது இடத்தைக் காலி செய்து விட வேண்டும். மீறி தங்கினால் கைது செய்யப்படுவார்கள்.

இப்படிப்பட்ட அனுமதிச் சீட்டு முறையைத்தான் தமிழ்நாட்டுக்கு வந்து வேலை பார்க்கும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு வேளை இந்த அனுமதிச் சீட்டு முறையைக் கொண்டு வர முடியாவிட்டாலும் கூட, வட இந்தியத் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாடு மக்களுக்கு பாதுகாப்பு தேவை என்கிறார்கள்.

நன்றி: Tamil.samayam.com


தமிழக வேலை தமிழருக்கே

#தமிழ்நாட்டுவேலை_தமிழருக்கே 

#tamilnadujobsfortamils 

உள் நுழைவு அனுமதி சீட்டு 

தமிழத்திற்கு வேண்டும்.

#TN_Needs_lLP

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக