திங்கள், 27 ஆகஸ்ட், 2018

பெருங்கடல் வேட்டத்து: மீனவர்களின் ஆறாத வடுவைப் பேசுகிற படம் :- செல்வம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் கோரத்தைப்  பேசுகிறது இப்படம். மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசுகளின் மீட்பு நாடகத்தை ஆதாரத்தோடு தோலுரித்துக் காட்டுகிறது. 

மூன்று நாட்கள் இரவு பகலாகக் கடலில் நீந்திக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணித் தத்தளித்த தமிழர்களைப் பிணமாகக் கூட மீட்க முடியவில்லை.

 வல்லமை படைத்த ஆட்சியாளர்களால்.  "மகனை இழந்த தாய் மூச்சடக்கி அழும்போது பார்ப்பவர்களுக்கு நெஞ்சு  அடைத்துக் கொள்கிறது" . கணவனை இழந்த பெண்கள் கதறும் போது கண்கள் வறண்டு விடுகின்றன. ஆண்களே இல்லாத ஊராக எதிர்காலமே இல்லாத வாழ்வாக இருக்கும் மீனவர்களின்   அவல நிலையை எதார்த்தமாக  எடுத்துக் காட்டுகிறது இப்படம்.

தமிழ்நாட்டில் இவ்வளவு நவீனத்துவ காலத்தில் மீனவர்களைக் காப்பதற்கு எந்த வழியும் இல்லையா? அவர்கள் வாழ்வு ஏன் இவ்வளவு அவலப் போராட்டம் நிறைந்ததாக உள்ளது என்ற ஆதங்கம் எழுகின்ற அளவிற்கு  ஒரு சிறந்த படமாக  சிறப்பான முறையிலே படமாக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வியல் கஷ்டங்களை சாமானியனின் நெஞ்சத்தில் ஆறாத வடுவாய்ப் பதிவு செய்கிறது
             "பெருங்கடல் வேட்டத்து".

செல்வம்,
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக் குண்டு,
தேனி மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக