சனி, 7 ஏப்ரல், 2018

நியூட்ரினோ திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை; நில நடுக்கம்தான் வரும்! : பொறியாளர் சுந்தர்ராசன்.

ஒரு திட்டம் அமைய வேண்டும் என்றால்,
அது எந்த மாதிரியான திட்டம்?
அமைய இருப்பது எந்த இடம்?
அந்தத் திட்டத்தால் கிடைக்கப் போகின்ற,
சமூக பொருளாதாரப் பயன்பாடுகள் என்ன?
இந்த மூன்று காரணிகளின் அடிப்படையில்தான், அந்தத் திட்டத்தை நாம் வரவேற்க வேண்டுமா? அல்லது எதிர்க்க வேண்டுமா?
என்கின்ற கருத்து ஆக்கத்தை
நாம் உருவாக்க முடியும்.

அப்படி இந்த நியூட்ரினோ எந்த மாதிரியான திட்டம்?

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் அமைய இருக்கின்ற நியூட்ரினோ ஆய்வகத்தில், நியூட்ரினோக்களை ஆய்வு செய்யப் போவதாக விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள்.

இயற்கையாகவே சூரியனில் இருந்தும் அண்டவெளியில் இருந்து கோடிக்கணக்கன நியூட்ரினோக்கள் நம் உடலை ஊடுருவிச் சென்று கொண்டுதான் இருக்கின்றன.

அவற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால், இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு,
செயற்கையாக, தொழிற்கூடங்களில் உருவாக்கப்படுகின்ற நியூட்ரினோக்களை ஆய்வு செய்யப் போகின்றார்கள்.

இயற்கை நியூட்ரினோக்களுக்கு நிறை கிடையாது. அவற்றால் பாதிப்பு இல்லை.

ஆனால், அமெரிக்காவின் ~பெர்மி ஆய்வுக்கூடத்தில் இருந்தும்,
ஐரோப்பா, ஜப்பான் ஆய்வகங்களில் இருந்தும், அண்டார்டிகாவில் இருந்தும் தேனி பொட்டிப்புரத்தை நோக்கி,
செயற்கை நியூட்ரினோ கற்றைகளை அனுப்பப் போகின்றார்கள்.

அவை, அதிக ஆற்றல் கொண்டவை.
அதிக நிறை கொண்டவை;
ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியவை.

எதற்காகத் தேனி பொட்டிப்புரத்தைத் தேர்ந்து எடுக்கின்றார்கள்?

அது மேஜிகல் பேஸ்லைன் என்று சொல்கின்றார்கள்; நியூட்ரினோ ஆய்வுக்கு ஏற்ற மலையாகக் கருதுகின்றார்கள்.

நியூட்ரினோ ஆய்வு எதற்காக?
எதிரி நாடுகளிடம் எங்கே அணுகுண்டுகள் இருக்கின்றன என்பதைக் கண்டு அறிந்து,
அவற்றைச் செயல் இழக்கச் செய்வதற்காகத்தான் இந்த ஆய்வு.

இது அடிப்படை அறிவியல் திட்டம் அல்ல;
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிகள் தொடர்பான திட்டம்.

அமெரிக்காவுக்குப் பிடிக்காத,
குறிப்பாக சீனா போன்ற நாடுகளிடம் உள்ள அணுகுண்டுகளை ஆராய்ந்து,
அதைச் செயல் இழக்கச் செய்வதுதான்
இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்.

இந்திய-அமெரிக்க அணுவிசை ஒப்பந்தத்தின்படி, இந்திய அரசு, அமெரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்து இருக்கின்றது.

இந்த மேற்குத் தொடர்ச்சி மலை,
உலகப் பண்பாட்டுச் சின்னம் என ஐ.நா. மன்றத்தின் யுனெஸ்கோ அறிவித்து இருக்கின்றது. 

‘பல்லுயிர் பாதுகhப்பு மண்டலம்’ என, மாதவ் கhட்கில் குழு, கஸ்தூரி ரங்கன் குழுக்கள் அறிவித்து இருக்கின்றன.

இந்த அறிவிப்புகளின் விளைவாக,
இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்தால்கூட, அங்கே குண்டு போடக்கூடாது.

தாஜ் மகல் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று இருக்கின்றதோ,
அதற்குச் சற்றும் குறைவு அல்ல இந்த மேற்குத் தொடர்ச்சி மலை.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் மக்கள் வாழ்வதற்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயிர்ப்போடு இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு இடத்தில்,
ஆயிரக்கணக்கான டன் வெடிமருந்துகள்,
ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி,
பத்து இலட்சம் டன் பாறைகளைத் தகர்த்து உடைத்து எடுத்து,
அந்த இடத்தில் இந்த ஆய்வகத்தை அமைக்கப் போகின்றார்கள்.

அண்மையில்,
ஹை குவாக் என்ற ஆய்வு இதழ்,
ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.

கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களில், 746 நிலநடுக்கங்கள் மனிதர்களால் தூண்டப்பட்டவை என்று சொல்கின்றது.

அவற்றுள் 37 பூகம்பங்கள்,
மிகப்பெரிய சுரங்கங்களைக் குடைந்ததால் தூண்டப்பட்டவை;

24 விழுக்காடு, பெரிய அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டுமானங்களால் தூண்டப்பட்டவை என்று அந்த அறிக்கை சொல்லுகின்றது.

இந்தத் தேனி மாவட்டம்,
ஏற்கனவே நீர்த்தேக்கங்களால் அழுத்தப்பட்டு இருக்கின்றது.

இங்கே வந்து, இத்தனை இலட்சம் பாறைகளை நீங்கள் உடைத்து ஆய்வகம் அமைத்தால், முல்லைப்பெரியாறு அணை வலு இழந்து உடைந்து நொறுங்கி விடும்

நண்பர்களே. இந்த ஆய்வகத்தால் கேரள மாநிலமும் பாதிக்கப்படும்.
அதனால்தான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கேரள மாநிலத்திற்கும் சென்று,
அங்கே உள்ள அரசியல் தலைவர்களையும் சந்தித்து, இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய கேடுகளை விளக்கிக் கூறி இருக்கின்றார்கள்.

ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருக்கின்ற முல்லைப்பெரியாறு அணை, இடுக்கி அணை, வைகை அணை, மேகமலை அணை என 18 பெரிய நீர்த்தேக்கங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

இவை அனைத்திற்குமே நியூட்ரினோ திட்டத்தால் ஆபத்துகள் ஏற்படும்.

சரி. இந்தத் திட்டத்தால் நமக்கு என்ன நன்மை?

தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்குமா?

இந்தப் பகுதியின் பொருளாதாரம் வளருமா?

எதுவும் கிடையாது.

யாரோ ஒரு சர்மாவும், சாஸ்திரியும் உள்ளே உட்கார்ந்துகொண்டு ஆய்வு செய்யப் போகின்றார்கள்.

அதிகபட்சமாக ஒரேயொரு ஆளுக்கு வாட்ச்மேன் வேலை கொடுப்பார்கள்.
அவ்வளவுதான்.
இந்தத் திட்டத்தால், இந்தப் பகுதியில்  வேறு எந்தப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படப் போவது இல்லை.

இது மிக மோசமான திட்டம்.

இந்தப் பகுதி நீர்பிடிப்புப் பகுதி என்று தமிழக அரசு சொல்லுகின்றது.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்தத் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடுத்துத் தடை ஆணை பெற்றுள்ளார்கள்.

இந்தத் திட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து பூவுலக நண்பர்கள் அமைப்பின் சார்பில் நாங்கள் வழக்குத் தொடுத்து,
அந்த அனுமதியை ரத்து செய்து
தீர்ப்பு வாங்கி இருக்கின்றோம்.

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி, எதிர்ப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இதை ஒரு சிறப்புத் திட்டமாக அறிவித்துச் செயல்படுத்தப் போகின்றார்களாம்.

அப்படி அனுமதி கொடுப்பதற்கு எந்தச் சட்டமும் இல்லை.

ஆக, இந்த நாட்டில் சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கே நாம் ஒரு பெரிய சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய கேடு கெட்ட நிலைமை இந்த நாட்டில் ஏற்பட்டு இருக்கின்றது.

அத்தகைய மோசமான நிலைக்கு பாசிச அரசுகள் சென்றுகொண்டு இருக்கின்றன.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராசன் அவர்களது பதிவிலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக