செவ்வாய், 4 ஜூன், 2024

மரப் பேச்சு - கல்பனா சாகர்


மண் மீட்டும் மௌன கீதங்கள் 
வேர் மௌனத்தின் ஆரவாரம் கிளைகளும் கனிகளும்.

மௌனமும் ஆரவாரமும் கலந்த அர்த்தநாரி நான்.
அறம் செய்பவன் 
அராஜகம் செய்பவன் என்று 
சனாதனம் பார்த்ததில்லை.

வந்தவனை 
மெத்தப் புகழ்ந்ததுமில்லை;
வெட்டியவனை 
வசை பாடியமிதுல்லை. 

மனிதம் மரத்துப் போனதால் 
மரித்துக் கொண்டிருக்கும் 
மண்ணிசை நான்.

மண்ணிசை மரித்துவிடாதிருக்க உயிர்த்தெழு மனிதமே!

-கல்பனா சாகர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக