செவ்வாய், 1 மே, 2018

அரிவாள் சுத்தியல் எனும் குறியீடு.


அரிவாள்
உழவர்களையும்,
சுத்தியல் தொழிலாளர்களையும்
அடையாளப்படுத்துகிற
பாட்டாளி வர்க்கத்தின் குறியீடு.
உழவரின் ஈகத்துக்கும்
தொழிலாளர் ஈகத்துக்கும்
மே நாள் வீரவணக்கம்.

பாட்டாளி வர்க்க சர்வதேச கீதம்!

பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்!
பாரில் கடையரே எழுங்கள் வீறுகொண்டு தோழர்காள்!

கொட்டு முரசு கண்ட
நம் முழக்கமெங்கும் குமுறிட
கொதித்தெழு புது உலக வாழ்வதில் திளைத்திட...

பண்டையப் பழக்கமென்னும் சங்கிலி அறுந்தது
பாடுவீர் சுயேச்சை கீதம் விடுதலை பிறந்தது.

இன்று புதிய முறையிலே இப்புவனமும் அமைந்திடும்;
இன்மை சிறுமை தீர நம் இளைஞர் உலகம் ஆகிடும்...

முற்றிலும் தெளிந்த
முடிவான போரிதாகுமே
முக மலர்ச்சியோடு
உயிர்த் தியாகம் செய்ய நில்லுமே.

பற்று கொண்ட மனித சாதி யாவும் ஒன்றதாகுமே,
மடிமிசைப் பிரித்த
தேச பாசையும்
ஓர் ஐக்கியமே...

பாரதோ மமதையின்
சிகரத் திறுமாந்துமே,
பார்க்கிறான் சுரங்கமில் நிலத்தின் முதலாளியே.

கூறிடில் அன்னார்
சரித்திரத்திலொன்று கண்டதே,
கொடுமைசெய்து
உழைப்பின் பலனைக் கொள்ளை கொண்டு நின்றதே...

மக்களின் உழைப்பெலாம் மறைத்து வைத்து ஒரு சிலர்,
பொக்கிசங்களில் கிடந்து புரளுகின்ற தறிகுவீர்.

இக்கணம் அதைத்
திரும்பக் கேட்பதென்ன குற்றமோ?
இல்லை,
நாம் நமக்குரிய
பங்கைக் காட்டிக் கேட்கிறோம்...

தொன்று தொட்டுழைத்த விவசாயி தொழிலாளி
நாம் தோழராகினோம்.

உழைப்போர் யாவரேனும்
ஓர் குலம்,
உண்டு நம் உழைப்பிலே உயர்ந்தவர்க்குச் சொல்லுவோம்.
உழைக்கும் மக்கள் யாவருக்கும் சொந்தமிந்த நிலமெலாம்...

வேலைசெய்யக் கூலி உண்டு வீனர்கட்கிங் கிடமில்லை.
வேதம் ஓதி உடல் வளர்க்கும் காதகர்க்கிங் கிடமில்லை.

நாளை எண்ணி வட்டிசேர்க்கும் ஞமலிகட்கிங் கிடமில்லை.
நாம் உணர்த்தும் நீதியை மறுப்பவர்க்கிங் கிடமில்லை...

பாடுபட்டுழைத்தவர் நிணத்தைத் தின்ற கழுகுகள்
பறந்தொழிந்து போதல் திண்ணம் பாரும்
சில நாளதில்.

காடு வெட்டி மலையுடைத்து கட்டிடங்கள் எழுப்புவோம்!
கவலையற்ற போக வாழ்வு சகலருக்குண்டாக்குவோம்...

பாட்டாளி வர்க்க ஈகியர்களுக்கு வீரவணக்கம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக